ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் பிரசாரம்!

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தலையொட்டி கட்சிகள் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற  பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிப். 24-ல் நாச்சாயி டீக்கடை, பெரிய வலசு, அக்ரஹாரம் வண்டிப்பேட்டை, கே.என்.கே. சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், பிப். 25-ல் ஜெகநாதபுரம் காலனி, சூரப்பட்டி நால்ரோடு, மரப்பாலம், சின்ன மாரியம்மன் கோயில் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அதுபோல, வருகிற 19 ஆம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com