ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம்
ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும், கடும் கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.
கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள், உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. மற்ற மதத்தினரை புண்படுத்தும்படி கோஷங்களை எழுப்பக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.