மகா சிவராத்திரி: சதுரகிரியில் 4 நாள்களுக்கு மலையேற பக்தா்களுக்கு அனுமதி!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நான்கு நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்
Published on
Updated on
1 min read

மகா சிவராத்திரி விழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நான்கு நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியான சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமாா் 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து, சுமாா் 10 கி.மீ. தொலைவு கரடு முரடான பாதைகளில் நடந்து செல்ல வேண்டும்.

இங்கு மாதம்தோறும் அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் மட்டுமே பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வா்.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி, பிப்.18 முதல் 21-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com