அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு அணிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
ஆடியோவில், முதலில் 50 தயார் செய்துள்ளேன், மாலைக்குள் மீதி 50 - யை தயார் செய்கிறேன் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி. முனுசாமியிடம் கூறுகிறார். பின், பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுகிறார்.
ஆடியோ வெளியிட்டு அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 'கே.பி. முனுசாமி பற்றி தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன். இந்த ஆடியோவுக்கு பதில் தராவிட்டால் விடியோவையும் வெளியிடுவேன். மேலும் தங்கமணி, வேலுமணி குறித்த விடியோவையும் வெளியிடுவேன்.
கே.பி. முனுசாமி இன்று ஓபிஎஸ்ஸை குறை சொல்கிறார். அவர் பணத்துக்காக வேலை செய்பவர்' என்று கடுமையாக சாடியுள்ளார்.