மின் இணைப்புடன் ஆதாா்: அவகாசம் இன்று நிறைவு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செவ்வாய்க்கிழமை (பிப்.28)  கடைசி நாளாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செவ்வாய்க்கிழமை (பிப்.28)  கடைசி நாளாகும்.

இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. 

பலரும் ஆதாா் எண்ணை இணைக்கததால், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப் 28 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com