தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிமுக வேட்பாளர் யார்? ஈரோட்டில் இபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 9:40 am

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில்   முன்னாள் அமைச்சர்கள்  கே.ஏ .செங்கோட்டையன்,  கே.சி.கருப்பணன்,
கே.வி.ராமலிங்கம், இதில்  சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் , பண்ணாரி, 
முன்னாள் சட்டமன்ற கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் உள்ளிட்ட ஏரலாலாமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு  உள்ளனர்.

Story image

அதோடு மட்டுமல்லாமல்,  முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Story image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, நசியனூர் பகுதியில் உள்ள தனது குல தெய்வ கோயிலான அப்பாத்தாள் கோயிலில், பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

இதற்கிடையே, அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 105 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.