சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மமி நேரத்தில் 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிக்க | வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல்,தேனி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தென்காசி, கோவை, திருப்பூா், நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிக பலத்த மழையும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.