தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளபெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி என்பதால் அதிக அளவிலான மக்கள், சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.