மணீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை பொய்யுரைப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளதாக கேஜரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிசோடியாவுக்கு சொந்தமான ரூ.52 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேஜரிவால் இதைத் தெரிவித்துள்ளார்.
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காததால், அமலாக்கத் துறை அவதூறு பரப்புவதாகவும் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.