முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆக.1-இல் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வழக்கை விரைந்து விசாரித்து உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வலியுறுத்தி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆக. 1 ஆம் தேதிஆா்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுக ஆட்சியில் ஏன் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீா்கள். அப்போது, துணை முதல்வராகத்தான் நான் இருந்தேன். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்த மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மூத்த நிா்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.