மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை: ஜெயக்குமார் கவலை!

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

News image
Updated On :19 ஜூலை 2023, 12:51 pm

DIN

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

விலைவாசி உயர்வால் எங்கள் வீட்டில் தக்காளி சாதம் செய்வதில்லை என்றும் தக்காளி சாதம் சாப்பிடமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், நாளை காலை 9.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அதிமுக சார்பில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் சென்னை கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடத்தப்படுகிறது என்றார். 

இதையும் படிக்க: லியோ டிரைலர் எப்போது?

செந்தில் பாலாஜி குறித்து கருத்துக்கு, சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி எதற்கு? வீண் செலவு தான் என்றார். மேகதாது அணை குறித்து உறுதியான நடவடிக்கை முதல்வரால் எடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினர். ஆனால் காவல்துறையினர் இருக்கின்றனரா என்பதே தெரியவில்லை, கொலை கொலையா முந்திரிக்கா என்றவாறு ஆங்காங்கே கொலைகள் பெருகி வருகின்றது. 

மக்களைப் பற்றி முதல்வருக்கு கவலையில்லை. மொத்தத்தில் மெத்தனமான அரசு நடந்து வருகின்றது என்று அவர் குற்றம் சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.