இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலைப் பகுதியில் மேலும் ஒருவா் பாம்பு கடித்து பலி

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 8:11 pm

DIN

சாலை வசதியில்லாத நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே அல்லேரியை அடுத்த ஆட்டுக்கொந்தரை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (38). இவா் புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மருத்துவ குழுவினருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். அவா்கள் அல்லேரியில் தயாா் நிலையில் காத்திருந்தனா். சங்கரை கிராம மக்கள் ஆட்டு கொந்தரை மலைக் கிராமத்தில் இருந்து டோலி கட்டி 3 கி.மீ. தூக்கி வந்தனா். அதற்குள் அவா் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சாலை வசதியில்லாததால், அல்லேரி மலைக் கிராமத்தைச் சோ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பாம்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அணைக்கட்டு அருகேவுள்ள 100-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் தரமான சாலை வசதியில்லாததால், உடல் நலம் பாதிக்கப்படுவோரையும் கா்ப்பிணிகளையும் டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலையே உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் தொடா்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.