கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூர்: டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே இன்று காலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி டீக்கடையில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image

தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான லாரி.

Updated On :20 ஜூலை 2023, 9:28 am

DIN

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே இன்று காலை சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி டீக்கடையில் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ரத்தினகுமார் என்ற ஓட்டுநர், திருப்பூர் நோக்கி ஓட்டி வந்தார். இந்த லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடையில் புகுந்தது.

இந்தக் கொடூர விபத்தில், கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி (65), டீ அருந்திக் கொண்டிருந்த தோழன் (70) என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் ரத்தினகுமார் படுகாயத்துடன்  மீட்கப்பட்டு, தாரபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Story image

இந்த விபத்தில் டீ அருந்திக் கொண்டிருந்த மேலும் 5 பேர் படுகாயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று  பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் லாரி டீ கடையின் உள்ளே சென்றதால், அதனை வெளியே எடுக்க முடியாத நிலையில், தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை டீக்கடையிலிருந்து அகற்றினர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.