சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கேகே நகர், போரூர், மாங்காடு, ஈக்காட்டுத்தாங்கல்
வேளச்சேரி, நங்கநல்லூர், ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, பூவிருந்தவல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலைமுதல் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.