மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் தக்காளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் தக்காளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே, ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜூலை 2023, 9:51 am

DIN


சென்னையில் தக்காளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே, ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் வியாழக்கிழமையன்று தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை நிலவரம் போல நாளுக்கு நாள் தக்காளி விலையும் ஏறுமுகமாகவும், ஒரு சில நாள்கள் இறங்குமுகமாகவும் இருக்கிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து அது சில்லறை விற்பனையில் எதிரொலிக்கும் முன்பே, விலை அதிகரித்துவிடுவதால், சில்லறை விற்பனைக் கடைகளில் பெரும்பாலும் தக்காளி விலை குறையாமலேயே இருந்துவிடுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து தமிழக சந்தைகளுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

தமிழகத்திலும் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக விலை அதிகரித்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1,100 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 400 டன் மட்டுமே விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. இதனால் புதன்கிழமை ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.30 அதிகரித்து வியாழக்கிழமை ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும், தக்காளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.140க்கு விற்பனையானது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழக்கம் போல கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.