மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை

தமிழகத்தில் நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

News image
அமைச்சர் பெரியகருப்பன்
Updated On :31 ஜூலை 2023, 12:40 pm

DIN


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், உயர்ந்து வரும் தக்காளி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளார்.

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 300 கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில், நாளை முதல் குறைந்தது 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மீது இந்த சுமை செல்லக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அறிவித்தார் அமைச்சர்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.  பெரிய மாவட்டங்களில் 15 நியாயவிலைக் கடைகளலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விளைச்சல் குறைந்ததன் காரணமாக இயற்கையாக ஏற்பட்ட விலை ஏற்றம்தானே தவிர, செயற்கையாக நடந்தது அல்ல என்றும் அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.