கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை!

மேட்டூர் அணை திறந்து வைக்கும் நிகழ்வு உள்ளதால், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :1 ஜூன் 2023, 1:11 pm

DIN

மேட்டூர் அணை திறந்து வைக்கும் நிகழ்வு உள்ளதால், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்திற்கு பங்கேறக காங்கிரஸ், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மேட்டூர் அணை திறப்புக்கு செல்லவுள்ளதால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தியும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் பங்கேற்பதும் சந்தேகம்தான். இதனால், கூட்டத்தின் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தின் தேதி மாற்றப்படவில்லை என்றால் திமுக தரப்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.