கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.16 கோடியில் தூர்வாரும் பணி: முதல்வர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ்  ரூ.16 கோடியில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News image
Updated On :9 ஜூன் 2023, 7:15 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ்  ரூ.16 கோடியில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2023 - 2024 ஆம் ஆண்டு காவிரி, டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள 
ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டத்தில் 100 பணிகள் 375.78 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.15. 88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது‌. 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில், கூழையாறு, நந்தியாறு ஆகிய 2 இடங்களில் நடைபெற்ற பணிகளை வெள்ளிக்கிழமை முதல்வர் நேரில் பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

திருச்சி மாவட்டத்தில்  நடைபெற்று வரும் பணிகளில் 21 ஆறுகள் 26.35 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 3.88 கோடி மதிப்பில் தூர் வாரப்படுகிறது. இதே போல 46 பாசன வாய்க்கால்கள் 33 பாசன வடிகால்கள் என 100 பணிகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.