திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2023, 8:17 am IST

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேசின் பாலம் - வியாசா்பாடி ஜீவா இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முதல் புதன்கிழமை (ஜூன் 14) வரை இரவு 11.30 முதல் அதிகாலை வரை 5.40 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்ட்ரலிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையும், அதிகாலை 4.15 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலிலிருந்து ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்ட்ரலிலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு செல்லும் ரயில், கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு இரவு 1.20 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுகிறது.

பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமையும், அதிகாலை 5.30 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமையும், அதிகாலை 3.20 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமையும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியிலிருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும், அதிகாலை 4 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருவள்ளூரிலிருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமையும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு செல்லும் ரயில் புதன்கிழமையும், அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் ஆவடியுடன் நிறுத்தப்படும். பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை ஆவடியுடனும், அரக்கோணத்திலிருந்து வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லும் ரயில் திங்கள்கிழமை சென்னை கடற்கரையுடனும் நிறுத்தப்படும்.

மாற்றுப் பாதை: அரக்கோணம் மற்றும் திருத்தணியிலிருந்து இரவு 10.45 மணிக்கு செல்லும் ரயில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சென்னை சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடிக்கு இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையும், இரவு 12.15 மணிக்கு புறப்படும் ரயில் திங்கள் மற்றும் புதன்கிழமையும் சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.