காஞ்சிபுரத்தில் பாஜக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காஞ்சிபுரம் பாஜக மாவட்ட செயலாளர் செல்வம் செய்யப்பட்டார்.
வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: மனைவி பெயரில் சொத்து வாங்குவது பினாமியாகாது: நீதிமன்றம்
கைது செய்யப்பட்ட செல்வம் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.