ஆளுநருக்கு கருப்புக்கொடி: அரசியல் கட்சிகள் முடிவு!

கடலூர் வழியே செல்லவுள்ள ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாளை (ஜூன் 21) கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. 
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

கடலூர் வழியே செல்லவுள்ள ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நாளை (ஜூன் 21) கருப்புக்கொடி காட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

சிதம்பரம் சென்றுவிட்டு கடலூர் வழியே திரும்பிச் செல்லும் ஆளுநருக்கு கருப்பு  கொடிகாட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்களை ஆளுநர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு இன்று வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  சிதம்பரம்,  சீர்காழி உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com