முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், நாடளுமன்ற எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை தொடர்பாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.வி.சண்முகத்தின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.63 லட்சம் பணமோசடி: தம்பதி கைது!