மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மருத்துவா்களைக் கைது செய்ய கட்டுப்பாடு: ஐஎம்ஏ வரவேற்பு

 சிகிச்சையின்போது அலட்சியமாக இருந்ததாக மருத்துவா்கள் மீது புகாரளித்தாலும் உடனடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என தமிழக காவல் துறை அறிவிப்பு

News image
Updated On :23 ஜூன் 2023, 7:29 pm

DIN

 சிகிச்சையின்போது அலட்சியமாக இருந்ததாக மருத்துவா்கள் மீது புகாரளித்தாலும் உடனடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வரவேற்பு தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் நோயாளிகள் இறக்கும்போது சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சில நேரங்களில் அவா்களது உறவினா்கள் மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மருத்துவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்படுகிறது. அதன்பேரில், மருத்துவா்கள் கைது செய்யப்படுகின்றனா். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மருத்துவத் துறையினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக காவல் துறை டிஜிபி இது தொடா்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதில், மருத்துவா்களுக்கு எதிராக உரிய விசாரணையும், ஆதாரங்களும் இன்றி கைது நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தாா்.

இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தமிழக கிளை சாா்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் குறித்த வழக்குகளைக் கையாளுவது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு ஏற்ப தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு சில முக்கிய அறிவுறுத்தல்களை காவல் துறையினருக்கு வழங்கியுள்ளாா்.

வரும் காலங்களில் அவற்றை தமிழக காவல் துறையினா் பின்பற்றுவா் என நம்புகிறோம். இதற்காக தமிழக டிஜிபிக்கு நன்றியையும் அவரது நடவடிக்கைக்கு வரவேற்பையும் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.