மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீடு உள்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :28 ஜூன் 2023, 4:39 am

DIN

நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீடு உள்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி(40). இவர் தற்போது நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் பணியாற்றிய போது புகையிலை பொருள்கள் கடத்தல் கும்பலுக்கு துணை போவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தப்பிச் சென்ற கும்பலிடம் லஞ்சம் பெற்று விடுவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் நாமக்கல் காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் புகார் சென்றது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீஸார் நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, மல்ல சமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை சம்பவம் நாமக்கல் காவல்துறை அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.