இதன் காரணமாக திங்கள்கிழமை மாசி மகத் திருவிழாவையொட்டி இக்கோயிலிலிருந்து மனோன்மேனி சமேத சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மானாம்பதி கூட்டுச் சாலையில் எழுந்தருளினார். பின்னர் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களான பெருநகர், இளநகர், விசூர், தேத்துறை, தண்டரை, மானாம்பதி, சேப்பாக்கம், குறும்பூர், மேல்மா, நெடுங்கல், அதிதி, சேத்துப்பட்டு, இளநீர்க்குப்பம், கீழ்நீர்க்குன்றம், அகத்தியப்ப நகர், நெடுங்கல்புதூர் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகளும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி மானாம்பதி கூட்டுச்சாலை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.