அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கழக அமைப்புச் செயலாளர் செந்தில் முருகன். பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகினார்.
இந்நிலையில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | திகார் ஜெயிலில் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!