கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

'ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்'

எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கான ஒருநாள் கருத்தரங்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. 

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2023, 2:42 pm

DIN

எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கான ஒருநாள் கருத்தரங்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. 

தமிழக அரசு மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைச் சார்ந்த 125க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் முகம்மது நசிமுத் பேசியதாவது, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு கடைபிடிப்பதை ஒரு கலாசாரமாக கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு கொள்கைகளை அடிக்கடி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை அனைத்து தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  

எண்ணெய் எரிவாயு தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் வரை பல்வேறு நிலைகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான பாதுகாப்பு கையேட்டினை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே. செந்தில் குமார் வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.