இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘ஆா்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த மூல உத்தரவுக்கு எதிராக புதிதாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனு இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால், அதையும் சோ்த்து விசாரிக்கும் வகையில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.