மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் 499 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனர். 

News image
Updated On :7 மே 2023, 4:22 pm

DIN


நாடு முழுவதும் 499 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனர். 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி காண் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ செவிலியா் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5.30 மணி வரை நடைபெற்றது. 

நாடு முழுவதும் 11,84,502 மாணவிகளும், 9,02,930 மாணவர்களும், 13 திருநங்கைகள் என மொத்தம் 20,87,445 பேர் பங்கேற்றனர். 

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 200 தோ்வு மையங்களில் விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனர். அதாவது, 1,47,581 பேர் தேர்வு எழுதினர். 

சென்னையில் 28 தோ்வு மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுதினா். 

நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற்றது.

வினாத்தாள் எப்படி இருந்தது?
நிகழாண்டு நீட் தோ்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன.

இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் கணித அடிப்படையில் இருந்ததால் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். 

வினாக்கள் மிகவும் கடினமாகவோ அல்லது எளிதாகவோ அல்லாமல் இரண்டு கலந்த கலவையாக இருந்ததாகவும், முதல்முறையாக தேர்வு எழுதியவர்களைவிட இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை தோ்வு எழுதுபவா்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கலாம் என்று தேர்வர்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.