ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25 ஆயிரம் லிட்டா் குடிநீா் பறிமுதல்: வழக்குப் பதிய பரிந்துரை

திருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
திருச்சியில் உரிமமின்றிச் செயல்பட்ட நிறுவனத்திலிருந்து தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.
Updated On :8 மே 2023, 3:39 am

DIN


திருச்சி: திருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி வயலூா் சாலை சோமரசம்பேட்டையில் உரிமமின்றி செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தில் தண்ணீா் உற்பத்தி செய்யக் கூடாது என தற்காலிகத் தடை விதித்தனா்.

ஆனால், அந்த நிறுவனத்தில் தடையை மீறி மீண்டும் முறைகேடாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சனிக்கிழமை அந்த நிறுவனத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் 25,000 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்து பாட்டில்கள், கேன்களில் அடைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பினா்.

மேலும் அந்நிறுவன உரிமையாளா் மீது குற்ற வழக்குப் பதியவும், திருச்சி உறையூா் காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.