கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வரின் முதன்மைச் செயலர் முருகானந்தம்

முதல்வரின் முதன்மை செயலராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :13 மே 2023, 12:58 pm

DIN

தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி முதல்வரின் முதன்மைச்செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
மேலும் உள்துறை செயலாளராக அமுதாவும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக செந்தில்குமாரும், இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக மணிவாசனும், பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகனும், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நந்தகுமாரும், போக்குவரத்துத்துறை செயலாளராக பணீந்தர் ரெட்டியும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் ஜெகநாதனும், 
சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணனும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரனும், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையராக கே.கோபாலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனராக கணேசனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.