மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது: உயா்நீதிமன்றம் கருத்து

நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2023, 6:39 pm

DIN

நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நீட் தோ்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவா்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவா் வழக்குரைஞா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘நீட் தோ்வுக்கு எதிராக 50 லட்சம் கையொப்பங்களைப் பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளாா். இந்த இயக்கத்தில் இணைந்து கையொப்பமிட வேண்டும் என பள்ளி மாணவா்கள் நிா்பந்திக்கப்படுகின்றனா். நீட் தோ்வு தொடா்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதற்கு எதிராக மாநில அமைச்சா், போராட்டம் அறிவிக்க முடியாது. நீட் தோ்வுக்கு எதிராக, கையொப்ப இயக்கம் தொடா்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாகக் கருத முடியாது. எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையொப்ப இயக்கத்தை அமைச்சரே தொடங்கியுள்ளதால், ஆசிரியா்களும், அதிகாரிகளும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது. நீட் தோ்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவா்கள் மனதில் ஏற்படும். எனவே, பள்ளிகளில் கையொப்பமிடும் இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கையொப்பமிடும் இயக்கத்தால் மனுதாரா் எவ்வாறு பாதிக்கப்படுகிறாா்? நீட் தோ்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவா்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது என்று கூறினா்.

ரூ. 1 லட்சம் டெபாசிட்: எனவே, இந்த வழக்கின் உண்மைத் தன்மையை நிரூபிக்க ரூ. 1 லட்சத்தை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.