/

மக்களவை தேர்தல்: தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நாளை ஆலோசனை

சென்னையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென்மாநில தேர்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

News image
Updated On :8 நவம்பர் 2023, 6:49 am

DIN

சென்னை: சென்னையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென்மாநில தேர்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகளும் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.