மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று(நவ.19) மீண்டும் தொடங்கியது.
கனமழையால் மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரை நீலகிரி மலைரயில் போக்குவரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மலைரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.