புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி சாவு 

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர். 

News image

கோப்புப்படம்

Updated On :27 நவம்பர் 2023, 2:49 am

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர். 

தருமபுரியை அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (28). கட்டட மேற்பார்வையாளர் பணி செய்து வந்தார். மனைவி அபிபிரியா (22). இவர்கள் இருவரும் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர். 

கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

அபிபிரியா ஐந்து மாத கர்ப்பினி என போலீசார் தெரிவிக்கின்றன.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.