
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து இளம் தம்பதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர்.
தருமபுரியை அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன் (28). கட்டட மேற்பார்வையாளர் பணி செய்து வந்தார். மனைவி அபிபிரியா (22). இவர்கள் இருவரும் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க | இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை அவசியம்
அபிபிரியா ஐந்து மாத கர்ப்பினி என போலீசார் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.