திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பராமரிப்புப் பணி: புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பராமரிப்புப் பணிக்காக, திங்கள்கிழமை(அக்.2) புறநகர் ரயில் சேவைகளிள் மாற்றம் செய்யப்பட்டுள்

News image
Updated On :1 அக்டோபர் 2023, 8:11 pm IST


சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்புப் பணிக்காக, திங்கள்கிழமை(அக்.2) புறநகர் ரயில் சேவைகளிள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை(அக்.2) விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

காஞ்சிபுரம்-கடற்கரை, கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் நாளை திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.