மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து: இருவர் பலி

நாமக்கல்லில், வீட்டில் சிலிண்டர் வெடித்து இரண்டு முதியவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகி உள்ளனர்.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 11:46 am

DIN

நாமக்கல்: நாமக்கல்லில், வீட்டில் சிலிண்டர் வெடித்து இரண்டு முதியவர்கள் வியாழக்கிழமை காலை பலியாகி உள்ளனர்.

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அக்ரஹார வீதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில், சமையல் செய்த போது திடீரென சிலிண்டர் பழுதானது. இதனைச் சரி செய்வதற்காக எரிவாயு நிறுவன ஊழியரை வீட்டிலிருந்தோர் அழைத்ததன் பேரில் அங்கு வந்தார்.

Story image

பழுதை சரிபார்த்தபோது திடீரென சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, வீட்டினுள் படுகாயங்களுடன் கிடந்த ஒருவரை மீட்டனர். 

Story image

இதில் நிகழ்விடத்திலேயே இரண்டு முதியவர்கள் பலியாகினர். அவர்களுடைய உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் விசாரணை செய்தனர்.

Story image

இந்த தீ விபத்தில் பலியானவர்கள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் பார்த்தசாரதி(68) என்பதும், தற்போது ஆஞ்சனேயர் கோயில் அருகில் வசிப்பதும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனலட்சுமி(62) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

Story image

மேலும் எரிவாயு நிறுவன ஊழியரான நாமக்கல்லைச் சேர்ந்த அருண்(25) பலத்த தீக்காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.