தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணை நாளை முதல் மூடப்படும்?

நீர்மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக குறைந்ததால் குட்டை போலக் காட்சியளிக்கும் மேட்டூா் அணை.
Updated On :8 அக்டோபர் 2023, 4:50 am

DIN

நீர்மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை நாளை முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூா் அணை மூலமாக, 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடிப் பயிா்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட வேண்டும். தற்போது சம்பா பயிா் சாகுபடி தொடங்கும் நேரம்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், மாதந்தோறும் தமிழகத்திற்கு கா்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்காத காரணத்தாலும், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து, நீா்இருப்பு குறைந்தபட்ச அளவான 9.6 டிஎம்சிக்குக் கீழே சென்றுள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம், ஞாயிற்றுக்கிழமை 1.72 அடியாகவும் நீா் இருப்பு 8.22  டிஎம்சியாகவும் குறைந்தது.

மேட்டூா் அணையின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் குடிநீா்த் திட்டங்களுக்காகவும் அணையில் 9.6 டிஎம்சி தண்ணீா் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மேட்டூா் அணை நீா் இருப்பு 8.22  டிஎம்சியாக உள்ளது. எனவே டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,300 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நாளை முதல்  நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.