சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெறவுள்ள திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு சென்னை வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

19வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு!

மேக்கேதாட்டு அணை: திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்! - மு.க. ஸ்டாலின்






