சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெறவுள்ள திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு சென்னை வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க | சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!
பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.