ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது!

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை,  போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை,  போக்குவரத்து இணை ஆணையர் முத்து தலைமையில் தொடங்கியது.

தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு உடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே. நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்; மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com