பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார்.
அரியாங்குப்பம் கோயில் கும்பாபிஷேகத்திற்காக நடிகர் யோகி பாபு இன்று புதுச்சேரி வந்திருந்தார். இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர் பேரவை வளாகத்திற்கு வந்து முதல்வர் என் ரங்கசாமியை சந்தித்தார்.
படிக்க: கேரளத்தில் கனமழைக்கு 2 பேர் பலி!
திரைப்படங்கள் குறித்தும், யோகி பாபு குடும்பம் குறித்தும் முதல்வர் ரங்கசாமி விசாரித்தார். ரங்கசாமியை பார்த்து திரைப்படங்கள் பார்த்தீர்களா? எனது நடிப்பு பிடித்திருக்கிறதா என நடிகர் யோகி பாபு கேள்வி கேட்டார்.
அதனையடுத்து இருவரும் தேநீர் அருந்திவிட்டு பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசினார். பின்னர் யோகி பாபு புறப்பட்டுச் சென்றார்.