தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும், ஆந்திர கடற்கரையோரம் மற்றும் தெலங்கானாவின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 12 - 20 செ.மீ. மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று நகரின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சசியின் நூறு சாமி முதல் தோற்ற போஸ்டர்!

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்: மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

