

சேலம்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.81 அடியிலிருந்து 46.57அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,031 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.72 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு 10.80 மி.மி. ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.