இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 செப்டம்பர் 2023, 5:02 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 718.33 கன அடி தண்ணீர் வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிகள் 525.55 கன அடி தண்ணீர் வந்தது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு:

சனிக்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக  இரண்டு மின்னாக்கிகளில் இயக்கப்பட்டு 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. 

அணை நிலவரம்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 2520 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 525.55 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.