நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

வீட்டில் கொசு உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும்!

சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image

ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்)

Updated On :17 செப்டம்பர் 2023, 1:56 pm IST

சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலவேம்பு, கபசுர குடிநீர் ஆகியவை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3 நாட்கள் வரை காய்ச்சல் இருந்தால் மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

3 நாட்கள் வரை காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலி மனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் நீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். சாக்கடை, குப்பையில் இதர நோய் வருவது போல் வீட்டுக்கு உள்ளேயே நல்ல தண்ணீரில் டெங்கு கொசு இருக்கும். அதனால், பொதுமக்கள் அதனைத் தடுத்து டெங்குவைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.