வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு( 1 முதல் 5ஆம் வகுப்பு வரை) மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com