காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருமயம் அருகே ஆம்னி பேருந்து, லாரி, இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி

ஆம்னி பேருந்துடன், லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலாயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

திருமயம் கோட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து

Updated On :30 செப்டம்பர் 2023, 1:09 pm IST


திருமயம்: திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை அருகே சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்துடன், லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மோதியதில், பேருந்து சாலாயோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு காரைக்குடிக்கு வந்த ஆம்னி பேருந்து  திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் கோட்டை வழியாக சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது போது திருமயம் நகருக்கு பிரியும் பகுதியில் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியும் எதிர்பாராத விதமாக திருமயம் நகருக்குள் செல்லும் சாலையில் திரும்பியபோது பேருந்து லாரி மீது மோதியது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து ஏறி இறங்கி அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தி லாரி  விழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த  சேலை வியாபாரி காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக  அனுப்பி வைத்தனர். பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது மற்ற பயணிகள் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். 

காயம் அடைந்தவர்கள் திருமயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து திருமயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.