ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களுக்கு 6  நாள்கள் அனுமதி

ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2023, 12:39 pm IST

விருதுநகர்: ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சதுரகிரி மலை அருகே சாப்டூா் வனச் சரகம் 5-ஆவது  ‘பீட்’ ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.

சுமாா் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும், பலத்த காற்று வீசி வருவதால் தீ பரவி வருகிறது.

இதனால், பக்தா்களின் பாதுகாப்புக் கருதி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்படுவதாகவும், தீ அணைக்கப்படும்பட்சத்தில், இனி வரும் நாள்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 31) முதல் புதன்கிழமை (ஆக. 2) வரை 3 நாள் மட்டும் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ஆடி மாதப் பௌா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில் ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சனிக்கிழமை (ஆக.12) முதல் வியாழக்கிழமை (ஆக.17) ஆறு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.