நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லை - திருச்செந்தூர் சாலைப் போக்குவரத்து முடங்கியது

திருநெல்வேலி - திருச்செந்தூர்  இடையேயான சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

News image
Updated On :19 டிசம்பர் 2023, 9:04 am IST


நெல்லை: திருநெல்வேலி - திருச்செந்தூர்  இடையேயான சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கருங்குளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், சாலை வழியும் முடங்கியது.

இதனால், கருங்குளம் பகுதியில் 15 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 35 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலச்செவல், முக்கூடல் பேரூராட்சிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் மேலப்பாளையம், தச்சநல்லூா் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், உடையாா்பட்டி, கருங்குளம், கான்சாபுரம், சீவலப்பேரி உள்ளட்ட இடங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நெல்லையில் பல குளங்கள் உடைந்துள்ளன. சீவலப்பேரி, சிற்றாறு, கங்கைகொண்டான் சுற்று வட்டாரங்களில் ஆறுகள் இணையக்கூடிய இடங்களின் முகத்துவாரங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை ஓரளவுக்கு மழை ஓய்ந்திருந்தாலும், மழையின் பாதிப்பு முற்றிலுமாக நீங்கிவிட்டதாக கருதக் கூடாது. நீா் நிலைகளில் தண்ணீா் குறைந்துவிட்டதாக நினைத்து படம் எடுக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ கூடாது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.