சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம்: அன்புமணி தகவல்

சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம் எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையை தாக்கும் அடுத்த பெரு வெள்ளம் எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

அன்று நான் எச்சரிக்கை விடுத்தேன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் வரும் என்று சொன்னேன். ஆனால் 8 ஆண்டுகளில் வந்துவிட்டது. இப்போதும் சொல்கின்றேன், சென்னை தாக்கும் பெரு வெள்ளம் 5 அல்லது 6 ஆண்டுகளில் வரும்.

எண்ணூர் எண்ணெய் கசிவுக்கு காரணமானவர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. கச்சா எண்ணெய் கசிவா அல்லது ரசாயண கசிவா என்று தெரியவில்லை.

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் குழுவினர் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனர். இந்த எண்ணெய் கசிவால் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com